கேப்பாபுலவினுள்ளும் காணாமல் போனோரின் புதைகுழிகளா?

மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள் இன்று (21) தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நந்திகடல் ஏரிக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுள்ள படையினர் அக்காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். போர் இறுதியாக நடைபெற்ற கரையோர பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளை படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடியுள்ளார்கள். … Continue reading கேப்பாபுலவினுள்ளும் காணாமல் போனோரின் புதைகுழிகளா?